ஏரல் கடல் பகுதியில் பல்லுயிர் தன்மையை மீட்டெடுப்பதற்காக உஸ்பெகிஸ்தான், கராகல்பக்ஸ்தானில் 672 ஹூபாரா கானமயில்களை (கிளமிடோடிஸ் மேக்வீனி) விடுவித்தது.
ஹூபாரா கானமயில், IUCN செந்நிறப் பட்டியலின் கீழ் ‘எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டின் (CITES) கீழ் பாதுகாக்கப்படுகிறது.
கஜகஸ்தானில் உள்ள ஒரு சிறப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட இப்பறவைகள், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றின் கூட்டுப் பாதுகாப்பு முயற்சியின் கீழ் விடுவிக்கப்பட்டன.
சோவியத் காலத்து பருத்தி சாகுபடிக்காக அமு தர்யா நதியிலிருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டதன் காரணமாக, ஏரல் கடல் அதன் 1960 களின் அளவிலிருந்து சுமார் 10% ஆகக் குறைந்துள்ளது.
இந்த பாதுகாப்புத் திட்டமானது வாழ்விடங்களை மீட்டெடுப்பதையும், வலசை போகும் உயிரினங்களைப் பாதுகாப்பதையும், மத்திய ஆசியாவில் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.