உத்தர காண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள சஹஸ்த்ரதாரா ஹெலிடிரோம் என்ற இடத்தில் நாட்டின் முதலாவது ஹெலிகாப்டர் உச்சி மாநாட்டை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
இந்த உச்சி மாநாடானது “ஹெலிகாப்டர்கள் மூலம் இணைப்பை விரிவுபடுத்துதல்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப் பட்டது.
மேலும் இந்த உச்சி மாநாட்டில் (Indian Air Force - IAF) ‘மெடேவக்கில் (தேசிய அளவில் மருத்துவ முகாம்) இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்களின் பங்கு’ குறித்து பேசுவதற்காக இந்திய விமானப் படையும் அழைக்கப்பட்டது.