HCQ-ன் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்த மருந்தை உற்பத்தி செய்வதில் இப்கா ஆய்வகம், சைடுஸ் கேடிலா மற்றும் வாலேஸ் மருந்து நிறுவனம் ஆகியவை இந்தியாவில் முன்னிலையில் உள்ளன.
இப்கா நிறுவனமானது உலக அளவில் இந்த மருந்தை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது.
இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவிற்குத் தேவைப்படும் செயல்படும் திறன் கொண்ட மருந்து மூலப்பொருட்களில் மொத்தத்தில் 70 சதவீதம் சீனாவிடமிருந்து வருகின்றன.
உலகின் 70% HCQ விநியோகத்தை இந்தியா உற்பத்தி செய்கின்றது.
இந்த மருந்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் நாடு இந்தியா ஆகும்.
மலேரியா, தோல் அழிநோய் மற்றும் சளி கீழ்வாதம் ஆகிய 3 நோய்களுக்காக இந்தியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 24 மில்லியன் என்ற அளவில் HCQ மருந்துகள் தேவைப்படுகின்றன.
தற்பொழுது, கொரானா வைரஸ் பாதித்துள்ள 55 நாடுகளுக்கு இந்த மருந்தினை விநியோகிக்கும் நடைமுறையில் இந்தியா இறங்கியுள்ளது.
இந்த மலேரியத் தடுப்பு மருந்தானது அமெரிக்க அதிபரினால் கோவிட் – 19 நோய்க்கு எதிராகப் போராடும் முறையில் ஒரு முக்கியத் தீர்வாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மருந்தானது மலேரியா இல்லாத காரணத்தினால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப் படுவதில்லை.
பிரேசிலின் பிரதமரான ஜெய்ர் போல்ஸ்னரோ இந்தியாவிடமிருந்து HCQன் விநியோகத்தை இராமாயணத்தில் அனுமன் கொண்டு வரும் “புனித மருந்து” அல்லது “சஞ்சீவினி” போன்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் 70வது குடியரசுத் தினத்தின் தலைமை விருந்தினர் போல்ஸ்னரோ ஆவார்.