எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துரப்பனக் கழகமானது இந்தியாவின் 8வது ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்யப்படும் வடிநிலப் பகுதியைத் திறந்துள்ளது.
இது மேற்கு வங்கத்தில் உள்ள அசோக் நகரில் திறக்கப் பட்டுள்ளது.
இது கிருஷ்ணா-கோதாவரி, மும்பை கடற்கரைப் பகுதி, அசாம் திட்டுப் பகுதி, ராஜஸ்தான், காவிரி, அசாம்-அராக்கன் மடிப்பு மற்றும் காம்பே ஆகிய பகுதிகளுடன் சேர்ந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 26 வடிநிலப் பகுதிகள் உள்ளன.
இதில் 16 நிலப்பகுதியிலும் 7 நிலப்பகுதி மற்றும் கடற்கரைப் பகுதியிலும், 3 முழுவதுமாக கடற்கரைப் பகுதியிலும் உள்ளன.