கர்நாடகாவிலுள்ள பேலூர், ஹலபேடு மற்றும் சோமநாத் புரா ஆகிய இடங்களில் அமைந்த ஹொய்சாலா ஆலயங்கள், 2022-23 ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரியப் பட்டியலில், இடம் பெறச் செய்வதற்காக வேண்டி இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
ஹொய்சாலர்கள் வம்சமானது கி.பி. 1110 முதல் கி.பி. 1226 வரையிலான காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஆட்சி செய்த ஒரு வம்சமாகும்.
இரண்டாம் நிருப காமா அல்லது சாலா என்பவர் இதனைத் தோற்றுவித்தார்.
முதலில் பேலூரில் இருந்த இதன் தலைநகரம், பிறகு இதன் தலைநகர் ஹலபேடுவிற்கு மாற்றப் பட்டது.