மத்திய அமைச்சரவை 2018 ஆம் ஆண்டு தேசிய ஹோமியோபதி ஆணையத்திற்கான வரைவு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
இம்மசோதா, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்திடும் வகையில் தற்போதைய கட்டுப்பாட்டாளரான ஹோமியோபதிக்கான மத்திய குழுவை மாற்றுவதற்கு வழிமொழிகின்றது.
இந்த வரைவு மசோதா, ஹோமியோபதி கல்வி மன்றத்தால் நடத்தப்படும் ஒட்டுமொத்த ஹோமியோபதி கல்வியை நிர்வகிக்கும் மூன்று தன்னாட்சி மன்றங்களோடு தேசிய ஆணையத்தை ஏற்படுத்திட வழிகோலுகின்றது.