TNPSC Thervupettagam

​​ஸ்கந்தகுப்தா விக்ரமாதித்யா

October 22 , 2019 2094 days 735 0
  • வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் குப்த வம்சப் பேரரசரான ஸ்கந்தகுப்தாவின் பங்கு குறித்து இரண்டு நாள் நடைபெறும் சர்வதேசக் கருத்தரங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
  • ஸ்கந்தகுப்தர் என்பவர் குப்தப் பேரரசரான முதலாம் குமார குப்தாவின் மகன் ஆவார்.
  • இவர் கி.பி 455 ஆம் ஆண்டில் அரியணையில் ஏறி கி.பி 467 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
  • இவர் புஷ்யமித்திரர்களைத் தோற்கடித்து விக்ரமாதித்யா என்ற பட்டத்தைத் தானே சூட்டிக் கொண்டார்.
  • இவரது 12 ஆண்டு கால ஆட்சியின் போது, இவர் இந்தியாவின் மாபெரும் கலாச்சாரத்தைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், நாட்டை அயல்நாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் பாதுகாத்து, வடமேற்கில் இருந்து இந்தியா மீது படையெடுத்த ஹூணர்களையும் தோற்கடித்தார்.
  • இவர் பொதுவாக மாபெரும் குப்தப் பேரரசை ஆண்ட அரசர்களில் கடைசி அரசராகக் கருதப் படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்