இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே நடத்தப்படும் கூட்டுப் பயிற்சியின் ஏழாவது பதிப்பான 2019 ஆம் ஆண்டின் “மித்ரா சக்தி” என்ற பயிற்சியானது 2019 ஆம் ஆண்டில் டிசம்பர் 01 முதல் 14 வரை புனேவில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
மித்ரா சக்தி என்ற பயிற்சியானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இராணுவ உறவுகள் மற்றும் இருநாட்டுப் படைகளுக்கு இடையேயான தொடர்புகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.