இந்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது உயர் இலட்சியமிக்க "75/25" என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 75 மில்லியன் நபர்கள் 2025 ஆம் ஆண்டிற்குள் தரமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பெருமளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) மூலம் வழங்கப் படுகிறது.
இது தொற்றாத நோய்களின் (NCDs) அதிகரித்து வரும் எண்ணிக்கையை குறைக்கச் செய்வதற்கான போராட்டத்தினை மேற்கொள்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாகும்.