வயநாட்டில் உள்ள முண்டக்கை-சூரல்மலை நிலச்சரிவு ‘Grey Rhino’ நிகழ்வாக அடையாளம் காணப்பட்டது.
இதன் பொருள், தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள் இருந்த போதிலும் புறக்கணிக்கப் பட்ட மிகவும் சாத்தியமான பேரழிவு ஆகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விரிவான மனித தலையீடு மற்றும் சுற்றுச்சூழல் தரமிழப்பு கொண்ட நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த அறிக்கையானது, கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மேம்பாடு மற்றும் எதிர்கால நிலச்சரிவுகளைத் தடுப்பதற்காக உள்ளூர் சமூகங்களின் தீவிர ஈடுபாட்டைக் கோருகிறது.
நீண்டகால நடவடிக்கைகளில் 2045-50 ஆம் ஆண்டுகளுக்குள் முழுமையான கரிம நீக்கத்திற்கான கேரளாவின் உறுதிப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முந்தைய நிபுணர் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.