TNPSC Thervupettagam

‘வறட்சி மீள்திறனை விரைவுபடுத்துதல்’ குறித்த அமைச்சர்கள் மட்டத்திலான கலந்துரையாடல்

August 28 , 2026 16 days 75 0
  • மங்கோலியாவின் உலான்பாத்தரில் நடைபெற்ற பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. மாநாட்டின் (UNCCD) COP17 மாநாட்டில், உலகளாவிய வறட்சிக் கொள்கையை, பாதிப்பு ஏற்பட்ட பின்னரான பதிலளிப்பிலிருந்து, தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் முன்கூட்டிய தடுப்புத்திறன் கொண்ட கொள்கையாக மாற்ற வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
  • முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், நீர்ப்பிடிப்புப் பகுதி மறுசீரமைப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாயம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என அது நாடுகளை வலியுறுத்தியது.
  • வறட்சியினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நீர்ப்பிடிப்புப் பகுதி மறுசீரமைப்பு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய பயிர்ச்செய்கை மற்றும் வலுவான முன் கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அது வலியுறுத்தியது.
  • வறட்சிக்காக ஒதுக்கப்பட்ட பேரிடர் நிதிகள், வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள் மற்றும் அவசரகால நீர் விநியோகம் ஆகியவற்றின் மூலம் வறட்சியைத் தாங்கும் திறனுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியது.
  • இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் சுமார் 68 சதவீதம் வறட்சி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகும்.
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம், மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இது செயல்படுகிறது.
  • இந்த வறட்சி எச்சரிக்கை அமைப்பானது, இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் மகாலனோபிஸ் தேசிய பயிர் முன்னறிவிப்பு மையம் ஆகியவற்றின் விண்வெளி அடிப்படையிலான வறட்சி முன்னறிவிப்புகளாலும் ஆதரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்