TNPSC Thervupettagam

“ஸ்வமித்வா” (SVAMITVA) திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள்

October 15 , 2020 1755 days 2655 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் “SVAMITVA” என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளின் நேரடி விநியோகத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • “SVAMITVA” என்பது கிராமப்புறப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களின் கள ஆய்வு மற்றும் வரைபடமிடல் என்பதைக் குறிக்கின்றது.
  • இது கடன் வாங்குவதற்காக அல்லது  இதர நிதியியல் பயன்பாடுகளுக்காக வேண்டி கிராமப் புறத்தினரால் சொத்துக்களை நிதியியல் சொத்தாகப் பயன்படுத்த வழிவகை செய்கின்றது.
  • இது நிலச் சொத்து மீதான பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவ இருக்கின்றது.

“SVAMITVA” திட்டம்

  • “SVAMITVA” (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டமானது மத்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு மத்திய அரசுத் துறைத் திட்டமாகும்.
  • இது தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினமான 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இது கிராமப்புறப் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்குஉரிமை ஆவணங்களைவழங்குவதையும் சொத்து அட்டைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்