TNPSC Thervupettagam

அதிகாரப்பூர்வ மொழிகள் அவசரச் சட்டம்- மேகாலயா

April 20 , 2026 14 hrs 0 min 84 0
  • மேகாலயா அதிகாரப்பூர்வ மொழிகள் அவசரச் சட்டம், 2026-க்கு, மேகாலய அரசு  ஏப்ரல் 16 அன்று ஒப்புதல் அளித்தது.
  • இது ஆங்கிலத்துடன் காசி மற்றும் காரோ மொழிகளுக்கும் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்தை வழங்குகிறது.
  • முன்னதாக, 2005 ஆம் ஆண்டின் மேகாலயா மாநில மொழிச் சட்டத்தின் கீழ் ஆங்கிலம் மட்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது.
  • இந்த அவசரச் சட்டம் அரசுப் பணிகள் மற்றும் அறிவிப்புகளை காசி, காரோ மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட அனுமதிக்கிறது.
  • இது நிர்வாகத்திற்கான அணுகலை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மொழிகளில் தேர்வுகள் மற்றும் ஆள்சேர்ப்பையும் அனுமதிக்கக்கூடும்.
  • இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் காசி மற்றும் காரோ மொழிகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை இது ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்