TNPSC Thervupettagam

அஷ்டமுடி ஈரநில மேலாண்மை

August 10 , 2025 2 days 29 0
  • கேரள உயர் நீதிமன்றமானது, அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குள் அஷ்டமுடி ஈரநில மேலாண்மை அலகை உருவாக்குமாறு மாநில அரசுக்கும், கேரள மாநில ஈரநில ஆணையத்திற்கும் (SWAK) உத்தரவிட்டது.
  • அஷ்டமுடி ஈரநிலத்திற்கான தளம் சார்ந்த ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தினை ஆறு மாதங்களுக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அஷ்டமுடி ஏரியானது கேரளாவின் இரண்டாவது பெரிய ஈரநிலமாகும், மேலும் இது 2002 ஆம் ஆண்டில் சர்வதேச ராம்சர் உடன்படிக்கையின் கீழ் ராம்சர் தளமாக நியமிக்கப் பட்டது.
  • இந்த ஈரநிலத்தின் பரப்பளவு 61.40 சதுர கிலோமீட்டரிலிருந்து 34 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளதோடு, அதிக மாசுபாடு மற்றும் வண்டல் படிவையும் எதிர்கொள்கிறது.
  • 2023 ஆம் ஆண்டில், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (NGT) ஆனது அஷ்டமுடி ஏரி மற்றும் பிற ஈரநிலங்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக மாநில அரசுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
  • செயல்பாடுகளுக்கான நீடித்த நிலையான நடைமுறைகளை உருவாக்கவும், வலை தளம் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பொது கருத்துரைப்பு அமைப்பைப் பேணவும் நீதிமன்றம் அந்தப் பிரிவுக்கு உத்தரவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்