TNPSC Thervupettagam

ஆதார் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

September 27 , 2018 2465 days 801 0
  • மத்திய அரசின் முதன்மை திட்டமான ஆதார் திட்டத்தை அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் (செப்டம்பர் 26) அறிவித்துள்ளது.
  • ஆதார் அட்டையின் எண்ணை நிரந்தர கணக்கு எண்ணுடன் (Permanent Account Number) இணைப்பதை கட்டாயமாகவும் வருமானவரி தாக்கல் செய்வதற்கு தேவையெனவும் அது தெரிவித்துள்ளது.
  • இருப்பினும் வங்கி கணக்குகளை திறக்க ஆதார் எண் கட்டாயமில்லை எனவும் தற்போதுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • மேலும் உச்ச நீதிமன்றமானது ஆதார் தகவலை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கும் ஆதார் சட்டத்தின் 57 வது பிரிவை ரத்து செய்துள்ளது.
  • தனியார் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆதார் எண்ணை வைத்திருக்க வலியுறுத்தும் இந்த பிரிவை அரசியலமைப்பிற்கு எதிரானது என அறிவித்துள்ளது.
  • தற்போது நடைமுறையிலுள்ள 5 ஆண்டுகள் என்ற கால அளவை ரத்து செய்து ஆதார் அங்கீகார ஆவணங்களை 6 மாதங்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்