மத்திய அரசின் முதன்மை திட்டமான ஆதார் திட்டத்தை அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் (செப்டம்பர் 26) அறிவித்துள்ளது.
ஆதார் அட்டையின் எண்ணை நிரந்தர கணக்கு எண்ணுடன் (Permanent Account Number) இணைப்பதை கட்டாயமாகவும் வருமானவரி தாக்கல் செய்வதற்கு தேவையெனவும் அது தெரிவித்துள்ளது.
இருப்பினும் வங்கி கணக்குகளை திறக்க ஆதார் எண் கட்டாயமில்லை எனவும் தற்போதுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றமானது ஆதார் தகவலை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கும் ஆதார் சட்டத்தின் 57 வது பிரிவை ரத்து செய்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆதார் எண்ணை வைத்திருக்க வலியுறுத்தும் இந்த பிரிவை அரசியலமைப்பிற்கு எதிரானது என அறிவித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள 5 ஆண்டுகள் என்ற கால அளவை ரத்து செய்து ஆதார் அங்கீகார ஆவணங்களை 6 மாதங்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.