பல்கலைக்கழக மானியக் குழுவானது (University Grants Commission) ஆர் பி திவாரி என்பவரின் தலைமையில் ஏழு உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
கல்லூரிச் சேர்க்கைக்கு ஒரே முறையான தளத்தை வழங்குவதற்காக மத்திய பல்கலைக் கழகங்களில் அடுத்த கல்வியாண்டிலிருந்து இளங்கலை மட்டத்தில் ஒரு பொதுவான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான நடைமுறைச் சிக்கல் குறித்து இந்தக் குழு பரிசீலிக்கும்.
புதிய தேசியக் கல்வி கொள்கையானது (NEP - National Education Policy) இந்தத் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறுவதற்கான தேவையை அகற்ற நுழைவுத் தேர்வுகளின் எண்ணிக்கையை குறைக்கப் பரிந்துரைக்கிறது.
NEP பரிந்துரையானது செயல்படுத்தப்பட்டால், தேசியத் தேர்வு முகமையானது நிறுவப் படும்.