தில்லியின் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த வி ராம்கோபால் ராவ் என்பவரின் தலைமையில் மத்தியக் கல்வி அமைச்சகமானது ஒரு குழுவை அமைத்து உள்ளது.
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் ஆட்சேர்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக வேண்டி இது அமைக்கப் பட்டுள்ளது.
23 இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களை "சிறந்த நிறுவனங்கள்" (Institutions of Excellence) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தக் குழு அறிவுறுத்துகின்றது.