ஆளில்லா விமானங்களின் மூலம் மருந்துகள் விநியோகம் – தெலுங்கானா
October 7 , 2019 2052 days 636 0
அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை தொலைதூரப் பகுதிகளில் விநியோகிப்பதற்கு என்று ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை தெலுங்கானா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இரத்தம் மற்றும் மருத்துவ மாதிரிகள் போன்ற பொருட்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் இனிமேல் வழங்கப்பட இருக்கின்றன.
குறிக்கோள்: மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பிரிவினர்களுக்கான சுகாதார அணுகலை அதிகரிப்பது.
இந்தக் கட்டமைப்பானது பின்வரும் அமைப்புகளினால் இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது
உலகப் பொருளாதார மன்றம் (WEF – World Economic Forum)
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம்
இது WEFன் “வானிலிருந்து மருத்துவம்” என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.
தெலுங்கானா அரசு தனது ஆளில்லா விமானக் கொள்கைக்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் பொது இயக்குநரகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.