1959 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டத்தை மாற்றுவதற்கும் அதன் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றுவதற்குமாக இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ISI) மசோதா, 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியப் புள்ளியியல் நிறுவனம் பி.சி. மகலனோபிஸ் என்பவரால் 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மேலும் 1959 ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை ஒரு சங்கத்திலிருந்து சட்டப்பூர்வமான நிறுவன அமைப்பாக மாற்றவும், அதன் முக்கிய கொள்கைகளை வகுக்கும் அமைப்பாக 11 உறுப்பினர்களைக் கொண்ட ஆளுநர் குழுவை உருவாக்கவும் இந்த மசோதா முன் மொழிகிறது.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் அதன் பார்வையாளராக (Visitor) இருப்பார், அதே சமயம் படிப்புகள் மற்றும் தேர்வுகள் போன்ற கல்வி சார்ந்த விஷயங்களை ஒரு கல்விக் குழு நிர்வகிக்கும்.
இயக்குநரின் நியமனம் மற்றும் மறுஆய்வு ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்யவும், தற்போதுள்ள நிறுவனத்தின் சொத்துகள், பொறுப்புகள், பணியாளர்கள் மற்றும் கல்வித் திட்டங்களை புதிய சட்டப்பூர்வ அமைப்புக்கு மாற்றவும் இந்த மசோதா முன்மொழிகிறது.
இந்தியப் புள்ளியியல் நிறுவனம் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது, மேலும் இது தில்லி, பெங்களூரு, சென்னை மற்றும் தேஜ்பூர் ஆகிய இடங்களில் மையங்களைக் கொண்டு உள்ளது.