இந்தியா, Indian Ocean Region in a Transforming World என்ற கருத்துருவின் கீழ் 10-வது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தையை (IOD) புது தில்லியில் நடத்தியது.
இந்த ஆண்டு, 2025-27 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பெருங்கடலோர நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.
இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தை (IOD) என்பது அரசு அதிகாரிகள், அறிஞர்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் சிவில் சமூக நிபுணர்களை ஒன்றிணைக்கும் ஒரு தடம் 1.5 (Track 1.5) மன்றமாகும்.
இந்தப் பேச்சுவார்த்தை முதன்முதலில் 2013-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற 13-வது IORA அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முன்மொழியப் பட்டதுடன் இதன் முதல் கூட்டத்தொடர் 2014-ஆம் ஆண்டில் கேரளாவில் நடைபெற்றது.
இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் பொருளாதாரம், பேரிடர் இடர் மேலாண்மை மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இப்பேச்சுவார்த்தை இந்தியாவின் மகாசாகர் (MAHASAGAR - பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான மேம்பாடு) தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது.