நிதி ஆயோக் அமைப்பின் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப மையம் ஆனது, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவினை குவாண்டம் மூலம் இயங்கும் மூன்று முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான ஒரு செயல் திட்டத்தினை வெளியிட்டது.
சர்வதேச வணிக இயந்திரங்கள் கழகத்துடன் (IBM) இணைந்து உருவாக்கப்பட்ட இந்த செயல்திட்டம், ஆராய்ச்சி, திறமை, வணிகமயமாக்கல் மற்றும் குவாண்டம் தொழில் நுட்பச் செயலாக்கத்தினை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இந்தியாவில் குவாண்டம் கணினி, பாதுகாப்பான தகவல் தொடர்பு, துல்லியமான உணர் நுட்பம் மற்றும் மேம்பட்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு விரிவுபடுத்துவதற்கான தேசிய குவாண்டம் திட்டத்தினை இது உருவாக்குகிறது.
சுகாதாரம், நிதி, தளவாடங்கள், எரிசக்தி மற்றும் தேசியப் பாதுகாப்பு போன்ற துறைகளை மாற்றுவதில் குவாண்டம் தொழில்நுட்பங்களின் பங்கை இந்தச் செயல் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.