TNPSC Thervupettagam

இந்தியாவின் பிரிக்ஸ் ஷெர்பா 2026 - சுதாகர் தலெலா

September 13 , 2026 9 hrs 0 min 49 0
  • 2026 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிப்பதால், இந்திய வெளியுறவுத்துறைப் பணி (IFS) அதிகாரியான சுதாகர் தலெலா இந்தியாவின் பிரிக்ஸ் ஷெர்பாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அவர் தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செயலாளராக (பொருளாதார உறவுகள்) உள்ளார் மற்றும் பிரிக்ஸ் அமைப்பிற்குள் இந்தியாவின் நிலைப்பாடு, பேச்சுவார்த்தைகள் மற்றும் உச்சிமாநாட்டிற்கான தயாரிப்புகளை ஒருங்கிணைக்கிறார்.
  • அவர் முன்பு பூட்டானுக்கான இந்தியத் தூதராகவும், வாஷிங்டன் டி.சியில் துணைத் தூதரகத் தலைவராகவும், சிகாகோவில் துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
  • பிரிக்ஸ் ஷெர்பா என்பது பிரிக்ஸ் உச்சிமாநாடுகளுக்கு முந்தைய இராஜதந்திர தயாரிப்புகள், பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒருமித்த கருத்து உருவாக்கம் ஆகியவற்றில் உறுப்பு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரி ஆவார்.
  • இந்தியாவின் 2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கான முதல் ஷெர்பா/துணை-ஷெர்பா (Sous-Sherpa) கூட்டம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் புது தில்லியில் நடைபெற்றது, இதில் தலெலா இந்தியாவின் ஷெர்பாவாக செயல்பட்டார்.
  • பிரிக்ஸ் தலைவர் என்பது சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பைக் கொண்டுள்ள நாட்டை குறிக்கிறது, அதே சமயம் ஷெர்பா என்பது தனிப்பட்ட உறுப்பு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரியை குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்