இந்தியாவில் சீட்டா (வேங்கை) அறிமுகம் – செயல்திட்டம்
January 8 , 2022 1274 days 662 0
மத்திய அரசானது, இந்தியாவில் சீட்டாக்களை (வேங்கை அல்லது சிவிங்கிப் புலி) அறிமுகம் செய்வதற்கான ஒரு செயல்திட்டத்தினை வெளியிட்டது.
இந்தச் செயல்திட்டமானது தேசிய புலிகள் வளங்காப்பு ஆணையத்தின் 19வது சந்திப்பில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
இந்தச் செயல்திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 50 சீட்டாக்கள் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படும்.
இதற்காக சுமார் 12 முதல் 14 சீட்டாக்கள் தென் ஆப்பிரிக்கா அல்லது நமீபியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
ஒவ்வொரு சிவிங்கிப்புலி உடலிலும் செயற்கைக்கோள் புவி இடங்காட்டி நுட்பம் சார்ந்த மிக அதிக அதிர்வெண் ரேடியோ அலைகளை வெளியிடும் ஒரு கழுத்துப் பட்டையானது பொருத்தப்படும்.
இவை மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ பால்புர் தேசியப் பூங்காவிற்குக் கொண்டு செல்லப் படும்.