கரீபியன் நாடுகளுடனான சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஜமைக்காவில் 'ஆரோக்ய மைத்ரி' அமைப்பை இந்தியா நிறுவியுள்ளது.
இது உலகளாவிய அவசரகால ஆதரவிற்கான இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த அமைப்பு, பேரிடர் காலங்களில் விரைவான மருத்துவப் பதிலளிப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான ஒரு கையடக்க, கூறுநிலை சுகாதாரப் பராமரிப்புப் பிரிவு ஆகும்.
இந்த அமைப்பினை நிறுவும் பணியானது தேசியப் பாதுகாப்பு சபை செயலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப் பட்டது.
இது ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் க்ரீன் ஜீனோம் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு உழைப்பை உள்ளடக்கியது.