இந்தியா – 2050 ஆம் ஆண்டில் முன்னணி உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் நாடு
May 27 , 2025 14 days 74 0
2050 ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி இந்தியா உலகின் முன்னணி உருளைக்கிழங்கு உற்பத்தியாளராக மாறும் பாதையில் உள்ளது.
இந்தியாவின் வருடாந்திர உருளைக் கிழங்கு உற்பத்தி அளவானது தற்போதைய 60 மில்லியன் டன்களிலிருந்து 2050 ஆம் ஆண்டிற்குள் சுமார் 100 மில்லியன் டன்களாக உயரக் கூடும்.
உருளைக்கிழங்கானது 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய நாட்டு வணிகர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளத்திற்குப் பிறகு இந்தியாவின் நான்காவது மிக முக்கியமான உணவுப் பயிராக உருளைக்கிழங்கு உள்ளது.
23 மாநிலங்களில் பயிரிடப் படுகின்ற இதன் உற்பத்தியில் 85% பங்கு வட இந்தியாவில் உள்ள இந்தியக் கங்கைச் சமவெளிகளில் இருந்தே வருகின்றன.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகியவை உருளைக்கிழங்கு உற்பத்தியில் முன்னணியில் உள்ள 3 மாநிலங்கள் ஆகும்.