மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகமானது இந்திய இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணைய தகுதிநிலையை வழங்குவதற்காக ஒரு முறையான அனுமதிக் கடிதத்தை வழங்கியுள்ளது.
இது இந்திய இராணுவத்தில் அனைத்து 10 வகைப் பிரிவுகளிலும் உள்ள பெண் அதிகாரிகளுக்கும் குறுகிய கால சேவை ஆணையத்திலிருந்து நிரந்தர ஆணையத் தகுதிநிலையை வழங்க அனுமதியளித்துள்ளது.
இதற்குமுன் பெண்களுக்கான அனுமதியானது குறுகிய கால சேவை ஆணையத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்பொழுது வரை பெண்கள் 14 ஆண்டுகளுக்கு மேல் இராணுவத்தில் பணியாற்ற முடியாது.