உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த அவசரச் சட்டம், 2026-ஐப் பிறப்பித்துள்ளார்.
இந்த அவசரச் சட்டம், இந்திய தலைமை நீதிபதி (CJI) தவிர்த்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37 ஆக உயர்த்துகிறது; இதன் மூலம் மொத்த அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34-லிருந்து 38 ஆக உயருகிறது.
நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் இல்லாதபோது, உடனடி நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 123-வது சரத்தின் கீழ் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்தத் திருத்தம், 1956 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டத்தின் பிரிவு 2-இல் உள்ள "முப்பத்து மூன்று" என்ற வார்த்தைக்குப் பதிலாக "முப்பத்து ஏழு" (thirty-seven) என்று மாற்றியமைக்கிறது.
2026 ஆம் ஆண்டு மே 16 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பில், நாடாளுமன்றம் கூட்டத் தொடரில் இல்லை என்றும், குடியரசுத் தலைவரின் உடனடி நடவடிக்கை தேவைப் படும் சூழ்நிலைகள் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படும்; நாடாளுமன்றம் மீண்டும் கூடிய 6 வாரங்களுக்குள் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படா விட்டாலோ அல்லது இரு அவைகளும் இதனை நிராகரித்தாலோ இது செயலற்றுப் போகும்.