மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரான ஹர்ஷ வர்தன் உணவு உரிமை மேளாவின் 2வது பதிப்பை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
நோய்களுக்கான உணவுகள் குறித்த ‘தி பர்பில் புக்’ என்ற ஒரு கையேட்டையும் மத்திய அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் இவர் NetSCoFAN (உணவுப் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்திற்கான அறிவியல் ஒத்துழைப்புக்கான அமைப்பு - Network for Scientific Co-operation for Food Safety and Applied Nutrition) என்பதனையும் தொடங்கினார்.
உணவு உரிமை இந்தியா என்ற இயக்கமானது 2018 ஆம் ஆண்டில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (Food Safety and Standards Authority of India - FSSAI) தொடங்கப் பட்டது.