மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் வரை நாட்டில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 282ற்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மாநிலங்களிடையே, தமிழ்நாடு 40 இறப்புகளை (மனிதக் கழிவினை மனிதன் அள்ளும் போது) பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் 31 இறப்புகளும் குஜராத் மற்றும் டெல்லி ஆகியவற்றில் தலா 30 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
மேற்கண்ட மாநிலங்களில் விரைவான மற்றும் திட்டமிடப் படாத நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 17 மாநிலங்களில் மனிதக் கழிவினை மனிதன் அள்ளும் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் சுமார் 60,440 அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது சுமார் 35,472 நபர்கள், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து மட்டும் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
இந்திய நாடாளுமன்றமானது மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் பணிக்கு தொழிலாளர்களை அமர்த்துவது மீதான தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013 என்பதனை இயற்றியுள்ளது. இச்சட்டம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
துப்புரவு என்பது மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு கூறாகும். சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான தொழிலாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் பணியாற்ற வைக்கப் படுகின்றார்கள்.
ஜென்ரோபாட்டிக்ஸ் என்பது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய ரோபாட்டிக்ஸ் நிறுவனம் ஆகும்.
2018 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்காக “பந்திகூட்” என்ற ஒரு ரோபோவை அறிமுகப் படுத்தியது.