TNPSC Thervupettagam

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுதல் குறித்த தரவு

December 29 , 2019 2001 days 884 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் வரை நாட்டில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 282ற்கும் மேற்பட்டோர்  இறந்து உள்ளனர்.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மாநிலங்களிடையே, தமிழ்நாடு 40 இறப்புகளை (மனிதக் கழிவினை மனிதன் அள்ளும் போது) பதிவு செய்துள்ளது.
  • தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் 31 இறப்புகளும் குஜராத் மற்றும் டெல்லி ஆகியவற்றில் தலா 30 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
  • மேற்கண்ட மாநிலங்களில் விரைவான மற்றும் திட்டமிடப் படாத நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் 17 மாநிலங்களில் மனிதக் கழிவினை மனிதன் அள்ளும் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் சுமார் 60,440 அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
  • இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது சுமார் 35,472 நபர்கள், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து மட்டும் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
  • இந்திய நாடாளுமன்றமானது மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் பணிக்கு தொழிலாளர்களை அமர்த்துவது மீதான தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013 என்பதனை இயற்றியுள்ளது. இச்சட்டம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
  • துப்புரவு என்பது மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு கூறாகும். சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான தொழிலாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் பணியாற்ற வைக்கப் படுகின்றார்கள்.
  • ஜென்ரோபாட்டிக்ஸ் என்பது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய ரோபாட்டிக்ஸ் நிறுவனம் ஆகும்.
  • 2018 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்காக “பந்திகூட்” என்ற ஒரு ரோபோவை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்