'நிலையான உணவு அமைப்புகளுக்கான சர்வதேச நிபுணர்கள் குழு' (IPES-Food) மூலம் “உணவு குறித்த ஒரு புதிய புவி அரசியல்” என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தகப் போர்கள், ராணுவ மோதல்கள் மற்றும் பலவீனமடைந்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை உலகளாவிய உணவு அமைப்புகளை மறுவடிவமைப்பு செய்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
உலகளவில் பசி மற்றும் பஞ்சம் அதிகம் நிலவும் பகுதிகளில், உணவு என்பது பெருகிய முறையில் போர்க்கருவியாகவும், பொருளாதார ரீதியாக வற்புறுத்தும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதை இது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிக்கை 'பொது உணவு இருப்பு வைத்தல்' (PSH) குறித்து விவாதித்தது, இதன் கீழ் அரசாங்கங்கள் உணவுப் பாதுகாப்பிற்காக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கின்றன.
இந்தியாவின் 'பொது உணவு இருப்பு வைத்தல்' திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-க்கு ஆதரவளிக்கிறது என்பதோடு மேலும் இது இந்திய உணவுவழங்குக் கழகத்தால் (FCI - Food Corporation of India) நிர்வகிக்கப்படுகிறது.