மஞ்சள்/குங்குமப்பூக்களுக்குப் போலியாக அல்லது இனிப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக ஆரமைன் O ஆனது சட்டவிரோதமாக உணவுகளில் சேர்க்கப் படுகிறது.
இது இந்தியாவில் உணவில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஒரு செயற்கை டைரில் மீத்தேன் அடிப்படையிலான மஞ்சள் சாயமாகும்.
இது பிரகாசமான மஞ்சள் நிற ஊசி போன்ற படிகங்களாகத் தோன்றுகின்ற, தண்ணீரில் கரையாது ஆனால் எத்தனால் மற்றும் DMSO (டைமெதில் சல்பாக்சைடு) ஆகியவற்றில் கரையக்கூடியது.
இது ஜவுளி, தோல் பதனிடல், அச்சிடுதல், நுண்ணுயிரியல் சாயம், ஆய்வக வினைப் பொருட்கள், காகிதம் மற்றும் மை ஆகியவற்றில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப் படுகிறது.
நச்சுத்தன்மை ஏற்றம் சார்ந்த அபாயங்களில் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, பெரிதாக்கப்பட்ட (வீங்கிய) மண்ணீரல், நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைவு மற்றும் பிறழ்வு விளைவுகள் ஆகியவை அடங்கும்.
இது மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் என IARC (புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்) வகைப்படுத்தியுள்ளது.
இதற்கான நாள்பட்ட வெளிப்பாடு நீண்டகால மரபணு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.