TNPSC Thervupettagam

உலகப் புகையிலைப்பயன்பாட்டுப் பரவல் அறிக்கை 2025

June 28 , 2025 6 days 58 0
  • இந்த அறிக்கையானது அயர்லாந்து நாட்டின் டப்ளினில் நடைபெற்ற புகையிலைக் கட்டுப்பாடு குறித்த உலக மாநாட்டில் உலக சுகாதார அமைப்பினால் (WHO) வெளியிடப் பட்டது.
  • புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஆறு நிரூபிக்கப்பட்ட WHO MPOWER நடவடிக்கைகளில் இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
  • புகையிலை ஆனது ஆண்டுதோறும் 7 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
  • WHO ஆனது 2008 ஆம் ஆண்டில் MPOWER உத்தியைத் தொடங்கியது.
  • 2007 ஆம் ஆண்டு முதல், 155 நாடுகள் சிறந்த நடைமுறை நிலையில் குறைந்தது ஒரு MPOWER நடவடிக்கையை ஏற்று மேற்கொண்டன.
  • இந்தியா புகையிலை புகைப்பதை நிறுத்துவதற்கு உதவி வழங்குதல் மற்றும் புகையிலை ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை செய்தல் போன்ற இரண்டு முக்கிய நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தியுள்ளது.
  • மற்ற நான்கு MPOWER உத்திகளில் இந்தியா ஒரு மிதமான முன்னேற்றத்தையே பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்