உலகப் பொருளாதார மன்றமானது, இந்தியாவின் ஆற்றல் பரிமாற்றத்திற்கான ஒரு செயல்திட்டத்தை வழங்குவதற்காக “திட்டம் 2070 : நிகர சுழிய இந்தியாவிற்கான ஒரு புதியப் பசுமை ஒப்பந்தம்” என்று தலைப்பிடப்பட்ட தனது அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையானது 2070 ஆம் ஆண்டுக்குள் ஒரு நிகர சுழிய உமிழ்வு நிலையை அடைவதற்காக இந்தியா நிர்ணயித்த இலக்கின் பின்னணியில் வெளியிடப் பட்டது.
பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகரும் இந்தியாவின் பரிமாற்றமானது 2030 ஆம் ஆண்டிற்குள் பொருளாதாரத் தாக்கத்தில் சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவு பங்கினை வகிக்கும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இது 50 மில்லியனுக்கு அதிகமான வேலைவாய்ப்பினை உருவாக்கும்.
இதன் மூலம் பொருளாதாரத் தாக்கமானது 2070 ஆம் ஆண்டுக்குள் 15 டிரில்லியன் டாலர் வரை உயரும்.
இந்திய நாடானது பருவநிலை மாற்றத்தின் முன்களத்தில் உள்ளது.
மற்ற நாட்டவர்களை விட, பருவநிலை மாற்றம் மற்றும் தீவிரமான வானிலை நிகழ்வுகளின் எதிர்மறையான விளைவுகளை இந்தியர்களே அதிகம் எதிர் கொள்ள இருக்கின்றனர்.