எச்.ஐ.வி (HIV - மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ்) தடுப்பூசியின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எச்.ஐ.வி என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும் என்ற நிலையில் இதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் எய்ட்ஸ் (AIDS) நோய்க்கு வழி வகுக்கும்.
இந்த நாள் 'எச்.ஐ.வி தடுப்பூசி விழிப்புணர்வு தினம்' என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது எச்.ஐ.வி தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிவியலாளர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களைக் கௌரவிக்கிறது.
பயனுள்ள எச்.ஐ.வி தடுப்பூசியின் தேவையை வலியுறுத்தி 1997 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் ஆற்றிய உரைக்குப் பிறகு இந்த நாள் அனுசரிக்கப்படத் தொடங்கியது.
முதல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் 18 மே 1998 அன்று கொண்டாடப்பட்டது.