இந்தியா முதன்முறையாக 2026 ஆம் ஆண்டுக்கான உலக கடல் உணவு மாநாட்டை (WSC) சென்னையில் நடத்தவுள்ளது.
உலக கடல் உணவு மாநாடு என்பது மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு உலகளாவிய கூடுகையாகும்.
WSC 2026 மாநாட்டை சர்வதேச மீன் ஆய்வாளர்கள் சங்கம், பிடிஏ வென்ச்சர்ஸ் மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் ஆதரவுடன், மீன்வளத் துறையால் இது இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த மாநாடு நீடித்த கடல் உணவு வர்த்தகம், மீன்பிடித் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.