TNPSC Thervupettagam

ஊரடங்கு 2.0விற்கான வழிகாட்டுதல்கள்

April 18 , 2020 1947 days 701 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது ஊரடங்கு (முடக்கம்) 2..0விற்கான ஒரு திருத்தப் பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இந்த திறன்மிகு ஊரடங்கின் போது பொதுப் போக்குவரத்துச் சேவைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மூடியே இருக்கும்.
  • இறுதிச் சடங்கின் போது 20 நபர்களுக்கு மேல் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
  • இந்த வழிகாட்டுதலானது பணியிடத்தில் முகமூடிகளை அணிவதைக் கட்டாயம் என்று ஆக்கியுள்ளது.
  • மேலும், எச்சில் துப்பினால் அபராதம் விதித்தல், கை காப்பான் திரவ வசதிகள் மற்றும் உடல் வெப்பநிலை அளவீடு போன்ற சுகாதார நல நடவடிக்கைகள் கட்டாயமாக்கப் பட்டுள்ளன. 
  • மத்திய உள்துறை அமைச்சகமானது தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ் பொது இடங்களில் எச்சில் துப்புவதைக் குற்றமாக்கியுள்ளது. 
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழிற்துறைப் பூங்காக்களில் செயல்படும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நிலக்கரிச் சுரங்கம் மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்