என்டியூரன்ஸ் 22 கடல் ஆய்வுப் பயணமானது சமீபத்தில் கேப் டவுன் என்ற ஒரு தென் ஆப்பிரிக்க நகரிலிருந்து திட்டமிட்ட காலத்தில் புறப்பட்டது.
இது அண்டார்டிகாவிலுள்ள வெடெல் கடலை நோக்கிப் பயணிக்கிறது.
இது ஃபால்க்லேண்ட்ஸ் என்ற கடல்சார் பாரம்பரிய அறக்கட்டளையினால் தொடங்கப் பட்டது.
இது புகழ்பெற்ற ஒரு துருவ ஆய்வாளரான சர் எர்னெஸ்ட் சாக்லெட்னின் தொலைந்து போன கப்பலான என்டியூரன்ஸ் கப்பலின் சேதமடைந்த பாகங்களைக் கண்டறிந்து, ஆய்வு செய்து படம் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.