TNPSC Thervupettagam

ஏழை கைதிகளுக்கான ஆதரவு திட்டம்

June 8 , 2025 2 days 15 0
  • ஏழை கைதிகளுக்கு மத்திய அரசு நிதியிலிருந்து நிதி உதவி வழங்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மத்திய அரசு கோரியுள்ளது.
  • தங்களது நிதி நிலைமையின் காரணமாக தங்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த முடியாததால் சிறைகளில் இருந்து ஜாமீன் அல்லது விடுதலை பெற முடியாத நபர்களுக்கு உதவ இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
  • மத்திய தலைமை முகமை (CNA) மூலம் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதி வழங்குகிறது.
  • இது தேசியக் குற்றப் பதிவு வாரியத்தினால் (NCRB) நிர்வகிக்கப் படுகிறது.
  • உள்துறை அமைச்சகம் ஆனது, 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் 'ஏழை கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் திட்டத்தினை' அறிமுகப்படுத்தியது.
  • 2025 ஆம் ஆண்டு இந்திய நீதி அறிக்கையின் படி, சிறைகளில் உள்ள தேசிய சராசரி கைதிகள் இருப்பு விகிதம் 131 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
  • விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை சிறைகளில் உள்ள மொத்த கைதிகளில் 76 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்