TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் வேலா

November 12 , 2021 1344 days 608 0
  • ஐஎன்எஸ் வேலா என்ற போர்க் கப்பலானது இரண்டு வருடத்திற்கும் மேற்பட்ட கடற்வழிச் சோதனைகளை அடுத்து இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப் பட்டது.
  • இது நாட்டின் நான்காவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும்.
  • ஐஎன்எஸ் வேலா கப்பல் எதிரிகளை எதிர்த்துப் போரிட ரேடார் கருவிகளில் சிக்காத மேம்பட்ட தொழில்நுட்பம்  (stealth) மற்றும் சிறந்த போர் திறன்களைக் கொண்டு இருப்பதாக அறியப்படுகிறது.
  • டீசல் - மின்னாற்றல் மூலம் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலானது மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (Mazagon Dock Ship builders Limited) என்ற நிறுவனத்தின் மூலம் திட்டம் 75 என்பதின் (Project 75) கீழ் கட்டப்பட்டது.
  • ஐந்தாவதுக் கப்பலான ஐஎன்எஸ் வகிர் ஆனது நவம்பர் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டு துறைமுகச் சோதனைகளை அது தொடங்கியுள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டின் டிசம்பரில் அதன் முதல் மேற்பரப்புக் கண்காணிப்புப் பணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாகஷீர் ஆனது தனது தயாரிப்பின் இறுதி நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்