ஐக்கிய இராஜ்ஜியத்தின் காமன்வெல்த் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது
April 28 , 2022 1154 days 516 0
ஐக்கிய இராஜ்ஜியத்தின் காமன்வெல்த் பாயின்ட்ஸ் ஆஃப் லைட் விருதிற்கு வங்காள தேசத்தைச் சேர்ந்த ‘பித்யானந்தோ’ என்ற கல்வித் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிஷோர் குமார் தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெறுவதற்காக வாய்ப்புகளை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய மகத்தானப் பணிக்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இந்த விருதானது, தங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்தத் தனிப்பட்ட தன்னார்வலர்களை அங்கீகரிக்கிறது.