இந்த அறிக்கையானது, ‘உலக சமூக அறிக்கை 2025: சமூக முன்னேற்றத்தை விரைவுப் படுத்துவதற்கான ஒருமித்த கருத்து கொண்ட ஒரு புதிய கொள்கை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் - உலக மேம்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் (UNU-WIDER) இணைந்து ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையால் (UN DESA) வெளியிடப்பட்டது.
வாழ்க்கைத் திருப்தி குறித்த சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகளவில் 60 சதவீத மக்கள் போராடி வருகின்றனர் என்பதோடு மேலும் 12 சதவீதம் பேர் துயருற்று வருகின்றனர்.
690 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவான வருமானம் கொண்டவர்களாக தீவிர வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் அதாவது ஒரு நாளைக்கு 2.8 பில்லியனுக்கும் அதிகமானோர், 2.15 முதல் 6.85 அமெரிக்க டாலர்கள் வரையிலான வருமானத்தில் வாழ்கின்றனர்.
இரண்டாவது உலக சமூக மேம்பாட்டு உச்சி மாநாடு ஆனது, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற உள்ளது.