ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்கள்
June 15 , 2022 1253 days 536 0
ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு 2023-2024 ஆம் ஆண்டுக் காலத்திற்கான நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியாவின் இரண்டாண்டு கால பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைய உள்ளது.
இது ஒரே நேரத்தில் அதிகாரம் வாய்ந்த இந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியையும் வகிக்கிறது.