ஒருங்கிணைந்த பெருங்கடல் கார்பன் ஆராய்ச்சி அறிக்கை 2026
March 2 , 2026 11 days 67 0
யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையம் (IOC) ஆனது ஒருங்கிணைந்த பெருங்கடல் கார்பன் ஆராய்ச்சி (IOC-R) அறிக்கையை வெளியிட்டது.
மனிதனால் உற்பத்தி செய்யப்படும் கார்பன் டை ஆக்சைடில் (CO₂) சுமார் 25% கடல் உறிஞ்சுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
வரையறுக்கப்பட்ட தரவு நிலை மற்றும் அறிவியல் இடைவெளிகள் காரணமாக கடல் கார்பன் உறிஞ்சுதலின் உலகளாவிய மதிப்பீடுகளில் உள்ள 10–20% வித்தியாசத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
கடல் கார்பன் ஈர்ப்பில் ஏற்படும் மாற்றங்கள், கடல் உயிரியலின் பங்கு, நிலம்-கடல்-பனி கார்பன் பரிமாற்றம், தொழில்துறை தாக்கங்கள் மற்றும் கடல் கார்பன் டை ஆக்சைடு நீக்கம் (mCDR) உள்ளிட்ட ஐந்து முன்னுரிமைப் பகுதிகளை இந்த அறிக்கை அடையாளம் காட்டுகிறது.