சமீபத்தில் இந்தியக் கடற்படையானது கேரளாவின் எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை மையத்தில் 3 மெகா வாட் திறனுள்ள சூரியஒளி மின் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்துள்ளது.
இந்தியக் கடற்படையில் மிகப்பெரியது இந்த சூரியஒளி மின் உற்பத்தி ஆலையாகும். இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இது 2022 ஆம் ஆண்டில் 100 ஜிகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தித் திறனை அடையும் தேசிய சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தின் நோக்கத்தில் அமைந்து உள்ளது.