பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஐக்கியப் பெருங்கடல் மாநாட்டில் (UNOC3) பருவநிலை நடவடிக்கைகளின் மீதான மையக்கருவில் முக்கிய ஒன்றாக பெருங்கடல்களையும் கொண்டு வரச் செய்வதற்கான ஒரு புதிய முயற்சியை பிரேசில் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன.
'கடல் சார் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளுக்கான (NDC) சவால்' ஆனது, நாடுகள் தங்கள் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDCs) கடல் சார்ந்த பருவநிலை நடவடிக்கைகளை இணைக்க வலியுறுத்துகிறது.
ஆஸ்திரேலியா, பிஜி, கென்யா, மெக்சிகோ, பலாவ் மற்றும் செய்ஷெல்ஸ் குடியரசு ஆகிய ஆறு நாடுகள் இந்த முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
2035 ஆம் ஆண்டிற்கான NDC பங்களிப்புகளுக்கான மூன்றாவது தொகுப்பின் காலக் கெடு ஆனது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆகும்.
195 பங்குதார நாடுகளுள் 21 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டு தங்கள் பங்களிப்புகளை வழங்கியுள்ளன.
இந்த ஆண்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாட்டிற்கான (UNFCCC) 30வது பங்குதாரர்கள் மாநாடு (COP30) ஆனது பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற உள்ளது.