TNPSC Thervupettagam

ECCAS மற்றும் ருவாண்டா

June 13 , 2025 2 days 28 0
  • மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகத்திலிருந்து (ECCAS) ருவாண்டா விலகுவதாக அறிவித்துள்ளது.
  • நில நடுக்கோட்டு (ஈக்வடோரியல்) கினியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் தலைமைப் பொறுப்பை ருவாண்டா ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
  • அதன் உறுப்பினர் நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டுகளில் ECCAS நிறுவப்பட்டது.
  • இது ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) உட்பட 11 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
  • கிழக்கு காங்கோவின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய M23 கிளர்ச்சி அமைப்பிற்கு இராணுவ ஆதரவை வழங்கியதாக ருவாண்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்