மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகத்திலிருந்து (ECCAS) ருவாண்டா விலகுவதாக அறிவித்துள்ளது.
நில நடுக்கோட்டு (ஈக்வடோரியல்) கினியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் தலைமைப் பொறுப்பை ருவாண்டா ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன் உறுப்பினர் நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டுகளில் ECCAS நிறுவப்பட்டது.
இது ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) உட்பட 11 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
கிழக்கு காங்கோவின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய M23 கிளர்ச்சி அமைப்பிற்கு இராணுவ ஆதரவை வழங்கியதாக ருவாண்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.