TNPSC Thervupettagam

தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள கடல் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 13 , 2025 17 hrs 0 min 29 0
  • பிரான்சில் உள்ள நைஸ் நகரில் இந்த வாரம் நடைபெறும் மாநாட்டிற்காக ஒரு சிறப்பு தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள (உயர்) கடல் ஒப்பந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது, இந்த மாநாட்டில் 18 ஒப்புதல்களைப் பெற்றது.
  • இன்றுவரையில், இந்த ஒப்பந்தத்தினை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த நாடுகளின் மொத்த எண்ணிக்கை 49 ஆகும்.
  • எதிர்காலத்தில் அதை அங்கீகரிப்பதற்கான அவற்றின் ஒரு நோக்கத்தைக் குறிக்கும் வகையில் கூடுதலாக 17 நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்ற ஒரு நிலையில் இதன் மூலம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளின் மொத்த எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
  • குறைந்தது 60 நாடுகள் இதனை அங்கீகரித்த 120 நாட்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
  • இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், இன்னும் அதனை அங்கீகரிக்க வில்லை.
  • இது அதிகாரப்பூர்வமாக தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் சார் உயிரியல் பன்முகத் தன்மை (BBNJ) ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 30 சதவீதப் பெருங்கடல்கள் மற்றும் நிலங்களைப் பாதுகாக்க உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல்லுயிர்ப் பெருக்க இலக்கை அடைவதற்கு இந்த ஒரு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்ற வகையில் இது "30x30" என்றும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்