TNPSC Thervupettagam

காலர்வாலி புலி உயிரிழப்பு

January 20 , 2022 1279 days 490 0
  • 'காலர்வாலி' என்று பிரபலமாக அறியப் படும் இந்தியாவின் "சூப்பர்மாம்" புலி (Supermom Tiger), மத்தியப் பிரதேசத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.
  • இதற்கு வயது பதினாறுக்கும் மேல் ஆகும்.
  • ‘காலர்வாலி’ புலி தனது வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்றதிற்காக அறியப் படுகின்றது.
  • இது ஒரு உலக சாதனை என்று நம்பப்படுகிறது.
  • இந்தப் புலிக்கு வனத்துறையினர் வழங்கிய அதிகாரப்பூர்வ பெயர் T-15 என்பதாகும்.
  • ஆனால் உள்ளூர் மக்களால் இது 'காலர்வாலி' என்று அழைக்கப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டில் இப்பூங்காவில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட முதல் புலி என்ற ஒரு பெருமையைப் பெற்றதால், அதற்கு இவ்வாறு பெயர் வைக்கப்பட்டது.
  • இதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பால் மத்தியப் பிரதேசம் ‘புலி மாநிலம்’ (Tiger State) என்ற ஒரு அடையாளத்தையும் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்