2025-26 ஆம் நீர் ஆண்டில் தமிழ்நாடு தனக்கு ஒதுக்கப்பட்ட பங்கை விட அதிக காவிரி நீரைப் பெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான கால கட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 177.25 டிஎம்சி அடிக்கு பதிலாக, பிலிகுண்டுலுவில் சுமார் 330 டிஎம்சி அடி காவிரி நீரைத் தமிழகம் பெற்றுள்ளது.
இந்த ஒதுக்கீடு 2007 ஆம் ஆண்டு காவிரி நீர் விவாதத் தீர்ப்பாயத்தின் (CWDT) தீர்ப்பின் மூலம் நிர்ணயிக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் (SC) திருத்தப் பட்டது.
தமிழகம் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்கை விட அதிக நீரைப் பெறுவது இது ஏழாவது முறையாகும், மேலும் ஆண்டு நீர்வரத்து 300 டிஎம்சி அடியைத் தாண்டுவது இது இரண்டாவது முறையாகும்.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் சுமார் 292 டிஎம்சி அடி நீர் பெறப்பட்டது, இது ஒரு அசாதாரண நிகழ்வாகும்.
2026 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி, காவிரி டெல்டாவில் சுமார் 2.1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி தொடங்கியுள்ளது.
குறைந்த நீர்த்தேக்க இருப்பு நிலைகள் மற்றும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை ஆகியவை நடப்பு நீர் ஆண்டில் (2026-27) நீர் இருப்பை பாதிக்கலாம்.