TNPSC Thervupettagam

குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் எய்ம்ஸ்

January 4 , 2021 1616 days 658 0
  • குஜராத்தின் ராஜ்கோட்டில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இது பிரதான் மந்திரி சுவஸ்திய சுரக்சா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் நிறுவப் படுகின்றது.
  • இதன் பணிகள் 2022 ஆம் ஆண்டின் மத்தியில்  நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • ராஜ்கோட் நகரில் உள்ள எய்ம்ஸ் ஆனது நாட்டின் 16வது நிறுவனமாக இருக்கும்.
  • 2019 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டின் தியோகர் நகரில் உள்ள எய்ம்ஸ் நிறுவனமானது கடைசியாக செயல்பாட்டிற்கு வந்த ஒரு எய்ம்ஸ் நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனங்கள் ஒரு பாராளுமன்றச் சட்டத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.
  • இதில் முன்னோடி நிறுவனமான புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனமானது 1956 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • அதன் பின்னர், மேலும் 22 நிறுவனங்கள் அறிவிக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்